தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
திருப்பூர்: தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, தாராபுரத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பாக ஒன்று கூடினர்.

மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ஷேக் பரீத் மற்றும் மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பாக ஒன்று கூடினர்.
மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ஷேக் பரீத் மற்றும் மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.