கோவை ரேஸ்கோர்ஸில் 'ஹிஜாப் சவால்' வீடியோ: யூடியூபர் கைது

கோவை ரேஸ்கோர்ஸில் நடைபயிற்சிக்கு வந்த பெண்களுக்கு 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில் வீடியோ எடுத்த யூடியூபர் அனஸ் அகமது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த பெண்களுக்கு 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில் வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்ட யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.



குன்னூரைச் சேர்ந்த அனஸ் அகமது என்ற யூடியூபர், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்ற இளம்பெண்களிடம் 'ஹிஜாப் சவால்' என்ற பெயரில், ஹிஜாப் அணிந்து பார்க்க விருப்பமா என தொகுப்பாளரை வைத்து கேள்வி கேட்க வைத்தார். விருப்பமுள்ள சில பெண்கள் ஹிஜாப் அணிந்தும் பார்த்தனர். பின்னர் ஹிஜாபுடன் இருக்கும் புகைப்படங்களை இளம் பெண்களிடம் தொகுப்பாளர் காட்டினார்.

இந்த வீடியோ குறிப்பிட்ட யூடியூப் பக்கத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கணபதி பகுதியைச் சேர்ந்த 'பாரத் சேனா' என்ற அமைப்பைச் சேர்ந்த குமரேசன், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் யூடியூப் பக்கத்தை நடத்தியவர், வீடியோவை பதிவு செய்தவர் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. யூடியூப் சேனலின் உரிமையாளர் அனஸ் அகமது செப்டம்பர் 7-ம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி, அனஸ் அகமதுவை வரும் செப்டம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...