கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா

கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், விநாயகர் ஊர்வலம், திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக அமைந்தன.



Coimbatore: கோவை உருமாண்டம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பாக 32வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, ஜி.என்.மில்ஸ் எல்லை மாகாளியம்மன் திருக்கோவிலிலிருந்து உருமாண்டம்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவிலுக்கு விநாயகர் அலங்கார சாரட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் கேரளத்து செண்டை மேளம் முழங்க, சிங்காரி மேளத்துடன் ஜமாத் அடித்து விநாயகர் அழைத்து வரப்பட்டார்.



மாலை 7 மணி அளவில் 251 பெண் பக்தர்கள் ஒரே வண்ண ஆடையில் கலந்து கொண்ட திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், குத்துவிளக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அரிசி, வளையல், பழங்கள், வெற்றிலை, பாக்கு, உதிரிபூக்கள் ஆகியவற்றை வைத்து பூஜைகள் தொடங்கப்பட்டன.



பின்னர் 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடப்பட்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில், அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...