விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நீலகிரி சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று (செப்டம்பர் 9) நடைபெறவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்ப போலீசார் நேற்று (செப்டம்பர் 8) அறிவுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நகரில் இந்து முன்னணி சார்பில் 85 இடங்களிலும், காரமடையில் 140 இடங்களிலும், சிறுமுகையில் 35 இடங்களிலும், அன்னூரில் 40 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணார்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேக்கம்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் திங்கள்கிழமை விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. சிறுமுகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பழத்தோட்டம் பகுதியிலும், அன்னூர், அவிநாசி தாலுகா பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் சிறுமுகை எல்லாப்பாளையம் பகுதியிலும் விசர்ஜனம் செய்யப்படும்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் சி.டி.சி. டிப்போ அருகில் மதியம் 1 மணியளவில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கரைக்கப்படும். இதன் காரணமாக, மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா சென்றுள்ள மக்கள், தங்களது பயணங்களை இதற்கு ஏற்றார்போல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வருபவர்கள், கோவை விமான நிலையத்துக்கு செல்பவர்கள் மதியம் 2 மணிக்குள் கோவை திரும்பி போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்கலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...