ஆனைமலை தென்னை நாற்றுப்பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு

ஆனைமலை அருகே ஆழியாற்றில் உள்ள தோட்டக்கலைத் துறையின் தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை மற்றும் குட்டை ரக கலப்பின தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: ஆனைமலை அருகே உள்ள தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் தென்னை நாற்றுப் பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, ஆனைமலை அருகே ஆழியாற்றில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் இயங்கும் தென்னை நாற்றுப்பண்ணையில் வளர்க்கப்படும் நெட்டை, குட்டை ரக கலப்பின நாற்றுகள் தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.

விற்பனை விலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள அவர், நெட்டை ரக கன்றுகள் ஒன்று ரூ.65க்கும், கலப்பின ரக கன்றுகள் ஒன்று ரூ.125க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். தென்னங்கன்றுகள் வாங்க விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆனைமலை தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என உதவி இயக்குனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...