கோவை மாநகராட்சி ஆணையர் கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் கிழக்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை 09.09.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். நகர்ப்புற சுகாதார நிலையம், பொது கழிவறை, தங்கும் விடுதி உள்ளிட்ட பல திட்டங்களை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், 09.09.2024 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, கிழக்கு மண்டலம் வார்டு எண் 54க்குட்பட்ட நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் 15வது மத்திய குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற சுகாதார நிலையத்தையும்,



வார்டு எண் 24க்குட்பட்ட கெகசியா பகுதியில் தூய்மை இந்தியா (2.0) திட்டத்தின்கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் பொது கழிவறையையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 57க்குட்பட்ட பட்டனம் சாலை, காமராஜர் நகரில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வீடற்றோருக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டு வருவதையும் ஆணையர் ஆய்வு செய்தார்.



பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.





அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 57க்குட்பட்ட ஓண்டிப்புதூர், சிந்து நகரில் செயல்பட்டுவரும் திடக்கழிவு மேலாண்மை மையத்தை ஆய்வு செய்த ஆணையர், மக்காத குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதே வளாகத்தில் செயல்படும் வீடில்லா நாய்களின் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.



வார்டு எண் 8க்குட்பட்ட காளப்பட்டி, சரவணம்பட்டி சாலை முதல் என்.ஜி.பி. கல்லூரி வரை 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் புதிய இணைப்புச் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.





வார்டு எண் 61க்குட்பட்ட சிங்காநல்லூர், ஆணையங்காடு சாலை பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், அங்கன்வாடி மையம், மற்றும் திருச்சி சாலை, சிங்காநல்லூர் குளத்தின் வளாகத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர்கள் பாக்கியம், விஜயகுமார், சாந்தாமணி, உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் கணேசன், குமார், முத்துக்குமார், ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் ஜீவமுருகராஜ், முருகேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...