கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மீது கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு: வியாபாரி பரபரப்பு புகார்

கோவையில், தேங்காய் வியாபாரி பிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தன்மீது போலி வழக்குகள் பதிந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



கோவை: கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி பிரகாஷ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.



தன்மீது போலியான வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் கோவை மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார்.



பிரகாஷ் கூறியதாவது: "குமரவேல் மற்றும் ரவிகுமார் என்பவர்களுடன் நீண்டகாலமாக கொப்பரை மற்றும் தேங்காய் வியாபாரம் செய்து வந்தேன். குமரவேல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டார். குமரவேல் மற்றும் ரவிகுமார் குறித்து விசாரித்ததில் இருவரும் பலரிடம் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது."

"இந்நிலையில் குமரவேல் மற்றும் ரவிகுமார் ஆகியோர் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் சில அதிகாரிகளின் துணையுடன் என் மீது போலி புகார்கள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யிடம் நேரில் ஆஜராகி அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தேன். ஆனால் டி.எஸ்.பி. அதனை ஏற்காமல் காலதாமதம் செய்வதோடு பணத்தை செட்டில்மெண்ட் செய்யச்சொல்லி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்," என்று பிரகாஷ் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும், தற்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவரையும் நேரில் சந்தித்து புகாரளிக்க வந்ததாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.

"வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் எங்களைப் போன்ற வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை," என்று பிரகாஷ் வேதனையுடன் தெரிவித்தார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...