பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவின் 20வது தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு.

தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கபட்டுள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா குற்றசாட்டு.

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. கட்டுமான துறை கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.இதற்கு தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர். கட்டுமான துறையில் சில சிக்கல் ஏற்பட்டால் பல்வேறு அரசு துறைகளை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால தாமதம் மற்றும் நேரம் விரயமாவதாகவும் கூறியவர்கள் கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை. வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



மேலும் ஒற்றை சாளர முறையை கட்டுமானங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வலியுறுத்தினர்.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் ஆற்று மணலை தவிர்த்து கட்டுமான தொழிலில் செயற்கை மணலை அதிகம் உபயோகிக்கபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் ஆற்று மணல் விலையை ஒப்பிடும்போது செயற்கை மணலின் விலை குறைவு என தெரிவித்தவர்கள் மணலின் தரத்தை அரசு உறுதி செய்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தற்போது மஹாராஷ்ட்ரா,கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆற்று மணல் தவிர்த்து செயற்கை மணல் மூலமே கட்டுமான தொழில் நடைபெறுவதால் இயற்கை வளம் பாதுகாக்கபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் கட்டுமான துறையில் திறன்மிகு தொழிலாளர் பற்றாகுறை நிலவுவதாக தெரிவித்தவர்கள் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக கூறினர். இன்று மாலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவு 20வது தலைவராக ராஜவேல் அவர்களும் துனை தலைவராக சின்னசாமி,செயலாளராக சிவராஜன்,துனை செயலாளராக பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தேசிய தலைவர் விஜய ராகவ ரெட்டி பதிவி பிரமானம் செய்து வைக்க உள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...