கோவை கவுண்டம்பாளையத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம்: 2026 தேர்தலுக்கான தயார்நிலை வலியுறுத்தல்

கோவை கவுண்டம்பாளையத்தில் தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற தீவிர செயல்பாடு தேவை என வலியுறுத்தப்பட்டது.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தி.மு.க சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.

கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கலந்து கொண்டார். அவர் தனது உரையில், "2026 சட்டமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



கூட்டத்தில் தி.மு.கழக மூத்த உறுப்பினர்களுக்கு கேடையம் வழங்கி பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் TP சுப்பிரமணியன், மாநில மகளிரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் ஜவஹர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மேலும், அவைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர்கள் சங்கர், ஈஸ்வரன், கண்ணகி, பொருளாளர் வசந்தகுமார், மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், கல்யாணசுந்தரம், சுனில்குமார், பிரபாகரன், வட்ட செயலாளர்கள் குட்டி வேலுச்சாமி, ரமணன், தனராஜ், காளிதாஸ், குமரேசன், மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வன், சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் அ.தி.மு.க நகர மாணவர் அணி இணை செயலாளர் கனகராஜ் தி.மு.கவில் அனைவர் முன்னிலையிலும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வு கட்சியின் வளர்ச்சியையும், அடுத்த தேர்தலுக்கான தயார்நிலையையும் காட்டுவதாக அமைந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...