கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீடு வீடாகச் சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினார். அவர் மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் நிர்வாகத்தையும் எடுத்துரைத்தார்.
Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பொன்விழா நகர் பகுதியில் இன்று பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
பொன்விழா நகரில் உள்ள வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காலை 10 மணிக்கு மத்திய அரசின் சாதனைகளை கூறியும் பிரதமர் மோடியின் திறமையான அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கை செய்தார்.

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பொன்விழா நகரில் உள்ள வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காலை 10 மணிக்கு மத்திய அரசின் சாதனைகளை கூறியும் பிரதமர் மோடியின் திறமையான அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கை செய்தார்.
பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.