கோவையில் பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை சின்னவேடம்பட்டியில் பர்னிச்சர் குடோனில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி மினி பேருந்து சாலையில் உள்ள ஊர் கவுண்டர் தோட்டத்தில் இன்று நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மூக்கையா என்பவருக்கு சொந்தமான 'பாலாஜி ஃகுஸ்ஷன் ஒர்க்ஸ்' என்ற பர்னிச்சர் குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. குடோனுக்கு அருகில் செல்லும் தாழ்வழுத்த மின்கம்பி வடம் அதிக காற்றினால் ஒன்றுக்கொன்று உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி உருவாகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...