கோவையில் பர்னிச்சர் குடோனில் பயங்கர தீ விபத்து: ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை சின்னவேடம்பட்டியில் பர்னிச்சர் குடோனில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னவேடம்பட்டி மினி பேருந்து சாலையில் உள்ள ஊர் கவுண்டர் தோட்டத்தில் இன்று நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மூக்கையா என்பவருக்கு சொந்தமான 'பாலாஜி ஃகுஸ்ஷன் ஒர்க்ஸ்' என்ற பர்னிச்சர் குடோனில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. குடோனுக்கு அருகில் செல்லும் தாழ்வழுத்த மின்கம்பி வடம் அதிக காற்றினால் ஒன்றுக்கொன்று உரசியதில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பொறி உருவாகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிகிறது.



சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...