ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம்

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கணினி தொழில்நுட்பத் துறை சார்பில் "சுயஉதவிக் குழு பெண்களுக்கான அதிகாரம்" என்னும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழு பெண்கள் கலந்துகொண்டனர்.



ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜே.ஜேனட் நிகழ்வினை துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கு இச்சமூகத்தில் அனைத்துவிதமான உரிமைகளிலும் சமபங்கு உள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த சமூகம் தனது பங்களிப்பை செலுத்தி வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுக்கென முன்னேற்றப்பாதையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் சுய வேலைவாய்ப்பின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவது பாராட்டுக்குறியது' என்றார்.

இதனைத்தொடர்ந்து, என்இஆர்டி சொசைட்டி தலைவர் சத்யஜோதி காமராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் பல துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இச்சமூகத்தில் சமஉரிமை உள்ளது என்றார். மேலும் அவர் பெண்களின் முன்னேற்றம், பெண்கள் சுயஉதவிக் குழுவின் செயல்பாடுகள், நபார்டு மூலம் பெண்களுக்கான வங்கிக் கடன், சுயஉதவிக் குழு பெண்களுக்கான அரசின் சிறப்புச் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.



இந்நிகழ்வில், என்இஆர்டி சொசைட்டியின் முதன்மை மேலாளர் முத்துக்கண்ணன், மேலாளர் சரஷ்வதி, கிருஷ்ணா வுட்டன் ஆர்ட்ஸ் என்.விஜயகுமார் மற்றும் கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் கணினித் துறை தலைமை பேராசிரியர் எஸ்.ஜே.கே.ஜெகதீஷ்குமார் மற்றும் அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...