மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீர் தீ விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்தது. ஓட்டுநர் சுயாதீனமாக தப்பித்தார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.



கோவை: மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரி ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, அரியலூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று, உதகை சாலையில் சின்ன பள்ளி வாசல் அருகே வந்தபோது திடீரென முன்பக்கத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, உடனடியாக லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு அங்கிருந்து இறங்கி தப்பினார். பின்னர் லாரியின் முன்பகுதி வேகமாக எரியத் தொடங்கியது.

சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். லாரியில் திடீரென எப்படி தீ பற்றியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...