பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து சர்ச்சை: மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

காரமடை அருகே பெள்ளாதி குளத்தில் மீன்பிடி ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் குறித்து சர்ச்சை எழுந்தது. அதிகாரிகள் தலையீட்டால் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெள்ளாதி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்து வந்தது. கடந்த ஜூலை மாதத்துடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று பெள்ளாதி குளத்திற்கு மீன்பிடிக்க படகுகள் மற்றும் வலைகளுடன் வந்தனர்.

ஆனால், முந்தைய ஒப்பந்ததாரர் மோகன்ராஜ் என்பவர் அவர்களை தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காரமடை போலீசார், மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு தரப்பினரும் இரண்டு நாட்களுக்கு பெள்ளாதி குளத்தில் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், யாரும் குளத்தில் மீன்பிடிக்காமல் இருக்க கண்காணிக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களில் பெரும்பாலான மீனவர்களின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால், ஒப்பந்த காலம் முடிந்ததால் மீன் பிடித்து விடலாம் என நினைத்து வலைகளுடன் வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...