கோவையை அடுத்த அன்னூர் கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் புதியதாக மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை சாலையில் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை, கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், புதிதாக மதுபானக்கடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் பெண்கள் மற்றும் உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க விடமாட்டோம் என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர்- சிறுமுகை சாலையில் இருந்த டாஸ்மாக் மதுபானக்கடையை, கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், புதிதாக மதுபானக்கடை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆயிரத்தும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் பெண்கள் மற்றும் உழைப்பாளி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறிய பொதுமக்கள், அப்பகுதியில் மதுபானக்கடை அமைக்க விடமாட்டோம் என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.