காட்டு யானை தாக்கியதில் நடைப்பயிற்சி செல்லும் நபர் படுகாயம்: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

கோவை மாவட்டம் காளையனூர் பகுதியில் நடைப்பயிற்சி சென்ற கணேசன் என்பவரை காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தார். காயமடைந்தவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மருதமலை, ஓணாப்பாளையம், தாளியூர், கெம்பனூர், வண்டிக்காரனூர், குப்பேபாளையம், விராலியூர், ஆலாந்துறை, கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாகவும், குட்டிகளுடனும் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன.

முன்னர் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னங்குருத்து, பாக்கு, அரசாணிக்காய், தக்காளி, சோளக்கதிர் போன்றவற்றை உண்டும், மிதித்தும் நாசம் செய்து வந்த யானைகள், தற்போது விளைநிலங்களைச் சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், கிராமங்களுக்குள் நுழைந்து வீதிகளில் உலா வருகின்றன. மேலும் ரேஷன் கடையில் உள்ள அரிசிகளை குறி வைத்து நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

நேற்று (செப்டம்பர் 10) இரவு தடாகம் அருகே காளையனூர் பகுதியில் மனோகரன் என்பவரின் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிச் சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஒற்றைக் காட்டு யானை மீண்டும் அங்கு திரும்பியது. பின்னர் மீண்டும் வனத்துறையினர் அதனை விரட்டினர்.

இன்று (செப்டம்பர் 11) அதிகாலை 5.30 மணி அளவில் சோமையனூரில் இருந்து காளையனூர் செல்லும் வழியில் நடைப்பயிற்சிக்கு சென்ற கணேசன் என்பவரை அந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரது கை உடைந்தது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் கண்காணித்து வந்த வனத்துறை குழுவினர் உடனடியாக அங்கு சென்று காயமடைந்தவரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க, அந்த யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...