கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இரு ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார். சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
Coimbatore: கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை நடு ரோட்டில் இரண்டு வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் அவர்கள் கற்களை எடுத்து வீசியதுடன், கத்தியால் துரத்தியும் அட்டகாசம் செய்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுந்தராபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கதிரேசன் (35) மற்றும் உதய சூரியன் (30) என்பது தெரியவந்தது. இருவருக்கும் அடிக்கடி ஆட்டோ சவாரி எடுப்பதில் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.
நேற்று (செப்டம்பர் 11) ஏற்பட்ட தகராறின் போது, கதிரேசன் கத்தியால் குத்தியதில் உதய சூரியனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதய சூரியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிரேசனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோதல் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுந்தராபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கதிரேசன் (35) மற்றும் உதய சூரியன் (30) என்பது தெரியவந்தது. இருவருக்கும் அடிக்கடி ஆட்டோ சவாரி எடுப்பதில் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.
நேற்று (செப்டம்பர் 11) ஏற்பட்ட தகராறின் போது, கதிரேசன் கத்தியால் குத்தியதில் உதய சூரியனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதய சூரியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிரேசனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோதல் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.