பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடற்ற தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: பொள்ளாச்சி நகராட்சியில் பயன்பாடு இல்லாத தள்ளுவண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி நகராட்சியில் 1,243 பதிவு பெற்ற தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இவற்றுடன் பதிவு பெறாத தள்ளுவண்டிகளிலும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் கணேசன் செப்டம்பர் 11 அன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், தினமும் வண்டியை எடுத்துச் சென்று மீண்டும் வியாபாரம் செய்யும் வகையிலேயே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வியாபாரம் செய்யும் இடத்தில் பந்தல் போடுதல், தடுப்புகள் அமைத்தல், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கைகள் போடுதல் போன்ற நிரந்தரமாக இடத்தை பிடித்து வியாபாரம் செய்யும் வகையில் செயல்படக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து செயல்படுவது கண்டறியப்பட்டால், அது ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றும் நகராட்சி ஆணையர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...