அன்னூர் வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே இதற்கு காரணம் என தெரிகிறது.
Coimbatore: அன்னூர் சாலையில் உள்ள வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் சாலை வாழைத்தார் மையத்தில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஏலத்திற்கு 9,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 7,000க்கும் மேல் நேந்திரன் வாழைத்தார்கள் இருந்தன.
ஏலத்தில் நேந்திரன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்சம் 27 ரூபாய்க்கும் விற்பனையானது. கதளி வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கும், அதிகபட்சம் 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த வாரம் கதளி வாழையின் விலை குறையாமல் இருந்தது.
பொதுவாக கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு நேந்திரன் வாழைக்காயின் தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே விலை சரிவுக்கு காரணம் என தெரிகிறது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் சாலை வாழைத்தார் மையத்தில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஏலத்திற்கு 9,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 7,000க்கும் மேல் நேந்திரன் வாழைத்தார்கள் இருந்தன.
ஏலத்தில் நேந்திரன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்சம் 27 ரூபாய்க்கும் விற்பனையானது. கதளி வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கும், அதிகபட்சம் 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த வாரம் கதளி வாழையின் விலை குறையாமல் இருந்தது.
பொதுவாக கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு நேந்திரன் வாழைக்காயின் தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே விலை சரிவுக்கு காரணம் என தெரிகிறது.