உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி செப்டம்பர் 11 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் வசதியாக அமைந்துள்ளது.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்திலிருந்து சுங்கம் செல்லும் வழி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து உக்கடம் நோக்கி மேம்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள், சுங்கம் சந்திப்பு செல்வதற்கான வழித்தடம் செப்டம்பர் 11 அன்று பயன்பாட்டுக்கு வந்தது. இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து செல்வோரும் உக்கடம் மேம்பாலத்தை பயன்படுத்தலாம்.

உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, ரூ.481.95 கோடி செலவில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 அன்று முதல்வர் ஸ்டாலின் இப்பாலத்தை பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அப்போது, சுங்கம் சந்திப்பில் இருந்து வாலாங்குளம் ரோட்டில் வரும் வாகன ஓட்டிகள் மேம்பாலத்தில் செல்வதற்கான ஏறு தளம் மற்றும் ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்படாமல் இருந்தது. இப்பணியை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

விபத்துகளைத் தவிர்க்க, தேவையான இடங்களில் சாலை பாதுகாப்பு ஒளிப்பான் ஒட்டவும், அறிவிப்பு பலகை வைக்கவும், மின் விளக்குகள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் முகாமிட்டு ஆய்வு செய்தனர். வாகனங்கள் தடங்கலின்றி சீராக சென்றதால், வாலாங்குளம் ரோட்டில் உள்ள ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இனி, சுங்கம் சந்திப்பில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் உக்கடம் மேம்பாலத்தைப் பயன்படுத்தி, ஆத்துப்பாலம் சந்திப்பு வழியாக பொள்ளாச்சி ரோடு அல்லது பாலக்காடு ரோடு செல்லலாம். அதேபோல், ஆத்துப்பாலம் சந்திப்பில் இருந்து வருவோர் சுங்கம் செல்வதற்கு உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள இறங்கு தளம் மூலமாக இறங்கிச் செல்லலாம்.

அடுத்த கட்டமாக, உக்கடம் பஸ் ஸ்டாண்ட் முன்பும், ஆத்துப்பாலம் சந்திப்பிலும் நிரந்தரமாக 'ரவுண்டானா' அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. மேலும், செடிகள் வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...