திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை கண்காட்சி தொடக்கம்

திருப்பூரில் சர்வதேச அளவிலான யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா, டைகெம் பிராசஸ் கண்காட்சிகள் தொடங்கின. 193 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா மற்றும் டைகெம் பிராசஸ் ஆகிய மூன்று கண்காட்சிகள் இன்று துவங்கியது. இந்த கண்காட்சிகள் திருப்பூர் பழங்கரையில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை இந்தியா நிட்பேர் அசோசியேசன் தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். இந்த நூலிழை கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.

பெல்ஜியம், கனடா, எகிப்து, சீனா, ஹாங்காங், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த நூலிழை தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் என 193 நூலிழை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த கண்காட்சியில் புதுமையான நூல், துணி ரகங்கள், டைஸ்கள், ஆஸிட், ஆடை அலங்கார பொருட்கள், இயற்கை ரகங்களான பருத்தி, பட்டு, கம்பளி ரகங்களும் செயற்கை நூலிழைகள், பிளண்டடு பாலியஸ்டர், ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும், பட்டன், ஜிப், லேஸ் உட்பட அனைத்து ஆடை தயாரிப்பு உபரி பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. 32-வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி, பின்னலாடை தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...