திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை கண்காட்சி தொடக்கம்

திருப்பூரில் சர்வதேச அளவிலான யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா, டைகெம் பிராசஸ் கண்காட்சிகள் தொடங்கின. 193 நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்.



திருப்பூர்: திருப்பூரில் சர்வதேச அளவிலான நூலிழை யார்னெக்ஸ், டெக்ஸ்இந்தியா மற்றும் டைகெம் பிராசஸ் ஆகிய மூன்று கண்காட்சிகள் இன்று துவங்கியது. இந்த கண்காட்சிகள் திருப்பூர் பழங்கரையில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை இந்தியா நிட்பேர் அசோசியேசன் தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார். இந்த நூலிழை கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.

பெல்ஜியம், கனடா, எகிப்து, சீனா, ஹாங்காங், நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த நூலிழை தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் என 193 நூலிழை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்த கண்காட்சியில் புதுமையான நூல், துணி ரகங்கள், டைஸ்கள், ஆஸிட், ஆடை அலங்கார பொருட்கள், இயற்கை ரகங்களான பருத்தி, பட்டு, கம்பளி ரகங்களும் செயற்கை நூலிழைகள், பிளண்டடு பாலியஸ்டர், ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும், பட்டன், ஜிப், லேஸ் உட்பட அனைத்து ஆடை தயாரிப்பு உபரி பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. 32-வது முறையாக நடைபெறும் இந்த கண்காட்சி, பின்னலாடை தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...