கோவை மாவட்ட காவல் காணிப்பாளர் ரம்யபாரதி அனுமதியின் பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சயனிடம் கேரள போக்குவரத்து பிரிவு போலீசார் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சயன் என்பவர் விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரண்டு முறை சயனையிடம் விசாரணை மேற்கொள்ள கேரள போலீசார் முயன்ற போது மருத்துவ நிர்வாகம் மறுத்து வந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி அனுமதியளித்ததின் பேரில் இன்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடந்த 28 ஆம் தேதி பழனி சென்று முருகனை குடும்பத்தோடு தரிசனம் செய்துவிட்டு சரியான தூக்கம் இல்லாததால் ஆங்காங்கே தனது காரை நிறுத்தி தூங்கியதாகவும், இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி வந்து மீண்டும் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும், பின்னர் அதிகாலையில் காரை எடுத்துக் கொண்டு திருச்சூர் செல்லும்போது விபத்து நடந்ததாகவும் சிகிச்சை பெற்று வரும் சயன் பாலக்காடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் விபத்து குறித்து மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக பேசுக்கூடாது என தமிழக காவல்துறை கேரள போலீசாரிடம் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காலை முதல் காத்திருந்த கேரள போலீசார் தற்போது விசாரணையை முடித்துக்கொண்டு மருத்துவமணையின் பின்பக்க வழியாக புறப்பட்டு சென்றனர்.
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சயன் என்பவர் விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரண்டு முறை சயனையிடம் விசாரணை மேற்கொள்ள கேரள போலீசார் முயன்ற போது மருத்துவ நிர்வாகம் மறுத்து வந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி அனுமதியளித்ததின் பேரில் இன்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கடந்த 28 ஆம் தேதி பழனி சென்று முருகனை குடும்பத்தோடு தரிசனம் செய்துவிட்டு சரியான தூக்கம் இல்லாததால் ஆங்காங்கே தனது காரை நிறுத்தி தூங்கியதாகவும், இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி வந்து மீண்டும் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும், பின்னர் அதிகாலையில் காரை எடுத்துக் கொண்டு திருச்சூர் செல்லும்போது விபத்து நடந்ததாகவும் சிகிச்சை பெற்று வரும் சயன் பாலக்காடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் விபத்து குறித்து மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக பேசுக்கூடாது என தமிழக காவல்துறை கேரள போலீசாரிடம் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காலை முதல் காத்திருந்த கேரள போலீசார் தற்போது விசாரணையை முடித்துக்கொண்டு மருத்துவமணையின் பின்பக்க வழியாக புறப்பட்டு சென்றனர்.