கோவை ஏஜேகே கல்லூரியில் விமரிசையான ஓணம் கொண்டாட்டம்: ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி

கோவை ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. மாணவர்கள் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டனர். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் பேராசிரியர் முனைவர் அஜித் குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவ மாணவியர்கள் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டனர்.

மாணவிகள் அலுவலக கட்டிடத்திற்குள் பல்வேறு மலர்களால் கண்கவர் அத்தப்பூ கோலமிட்டனர். கல்லூரி வளாகத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களில் பாடல்கள் ஒலிக்க, சண்ட மேளம் உள்ளிட்ட பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்கின. மாணவர்கள் ஆடி பாடி குதித்து உற்சாக நடனம் ஆடினர்.



அத்தப்பூ கோலத்தைச் சுற்றி பாரம்பரிய உடையில் மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய நடனமான மோகினி ஆட்டம் ஆடி காட்டினர். தொடர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் களரி தற்காப்பு பயிற்சியை செய்து காட்டினர். இந்த பாரம்பரிய நடனமும் தற்காப்பு கலையும் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.



விழாவின் போது அனைவருக்கும் ஓணம் சத்யா விருந்தளிக்கப்பட்டது. கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, வானில் வட்டமிட்டு கல்லூரியின் மைதானத்தில் வந்து தரையிறங்கிய ஹெலிகாப்டரை அனைவரும் கண்டு வியந்தனர்.



ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய மகாபலிக்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த விமரிசையான ஓணம் கொண்டாட்டம் மாணவர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...