கோவையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிப்பு: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் காந்தி கண்டனம்

கோவையில் GST குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.


Coimbatore: கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், GST விகிதங்களில் உள்ள முரண்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

இனிப்புக்கு 5% GST இருப்பதாகவும், காரத்துக்கு 12% இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பன்னுக்கு GST இல்லாமல் இருக்கும் அதே வேளையில், அதற்குள் வைக்கும் கிரீமுக்கு 18% GST விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இந்த முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்றும், கடை நடத்த முடியவில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படும் மற்றொரு வீடியோவும் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது X தளத்தில், "உணவக உரிமையாளரின் கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடனும் நடத்தப்படுகிறது. தன் கோடீஸ்வர நண்பர்கள் விதிகளை வளைக்க, சட்டங்களை மாற்ற, தேசிய சொத்துகளை பெற முற்பட்டால், பிரதமர் மோடி சிவப்பு கம்பளம் விரிக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "பணமதிப்பிழப்பு, அணுக முடியாத வங்கிகள், வரி பறிப்பு, பேரழிவு தரும் GST போன்றவற்றை சிறு வணிகர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக சிறு வணிகர்களுக்கு கிடைப்பது மேலும் அவமானம் மட்டுமே" என்றும் ராகுல் காந்தி தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருவதாகவும், ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின் பிடிவாதம் புண்படுத்தப்படும் போது அவமானத்தை மட்டுமே தருவார்கள் என்பது நன்கு தெரிவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...