டாஸ்மாக் வேண்டாம் என்ற விருப்பத்தை கிராம சபை மூலமாக கூட நிறைவேற்ற முடியாத நிலை- மக்கள் வேதனை


கிராம சபை என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படுகிறது. 

இந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை திட்டமிடுதல், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைகளை வெளிப்படுத்தலாம். மேலும், ஆலோசனைகளை தீர்மானமாக்கி அவற்றை நிறைவேற்றும் அதிகாரமும் உண்டு.

கிராம ஊராட்சிகள் ஆண்டுக்கு 4 முறை கிராம சபை கூட்டத்தினை நடத்த வேண்டும். அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

அந்த வகையில், கோவையை அடுத்த மதுக்கரை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று கிராம சபைக் கூடம் நடைபெற்றது.

இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, ஊராட்சி பகுதிக்குள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கூறி தீர்மானத்தை முன்வைத்தனர். ஆனால், அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் அந்த தீர்மானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுஜாதா என்பவர் கூறியதாவது:-

கிராம சபைக் கூட்டம் என்பது மக்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டம். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் சுப்ரீம் கோர்ட் கூட தலையிட முடியாது என்பது சட்டம். அப்படியான கிராம சபை கூட்டத்தில் மக்கள் கொண்டுவரும் தீர்மானங்கள் அதிகாரிகளால் ஏற்கப்படுவது இல்லை. தீர்மானங்கள் படித்துவிட்டு செல்லும் அளவிலேயே இருக்கிறது.

மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மே 1 அன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மலுமிச்சம்பட்டி ஊராட்சி டாஸ்மாக் இல்லாத ஊராட்சியாக வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து அதை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரிடம் கொடுத்தோம். அதை அவர் ஏற்கவில்லை. மாறாக மனுவாக எழுதி தர கோரினார்.

கிராம சபைக்கு இருக்கும் தனித்துவமே அதன் அதிகாரம் தான். அனால், இங்கு அதிகாரிகள் மக்கள் கொண்டுவரும் தீர்மானகளை ஏற்பது இல்லை. இதனால், மக்கள் உரிமை என்பது பெயரளவிலேயே இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று சுஜாதா தெரிவித்தார்.

நல்ல முடிவுகளை தீர்மானங்களாக மக்கள் கொண்டுவரும் நேரத்தில் அதை அதிகாரிகள் நிராகரிப்பது மக்களிடத்தில் அரசின் மீதான அதிருப்தி அலைகளை உண்டாக்கும். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு கிராம சபைகளின் உரிமைகளை மீட்டு கொடுக்கும்பட்சத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் வாழும் மக்கள் மன நிறைவுடன் வாழ்வர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...