கோவையில் தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை: மூன்றாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது

கோவை சங்கனூரில் விஜயராகவன் என்ற தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் உடலைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சங்கனூர் பகுதியில் வசித்து வந்த விஜயராகவன் என்ற தொழிலாளி, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



விஜயராகவன் என்ற விஜய், சங்கனூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத அவர், பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்ததாகவும், குடும்பப் பிரச்சனையால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற விஜயராகவன், அருகிலுள்ள சண்முகம் என்பவருக்குச் சொந்தமான 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் உயிரற்ற நிலையில் கிடந்த விஜயராகவனின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று செப்டம்பர் 13 ஆம் தேதி, மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...