பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், ஒலி மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை விதித்தது.

இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இன்னும் சில தனியார் பேருந்துகள், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இவ்வகையான ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் ஆடியோ கருவிகளை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ தியாகராஜன் செவ்வாயன்று திடீர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தார்.
தொடர்ந்து சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்லும் பேருந்துகள் மீதும், ஓட்டுநர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இன்னும் சில தனியார் பேருந்துகள், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இவ்வகையான ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் ஆடியோ கருவிகளை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ தியாகராஜன் செவ்வாயன்று திடீர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தார்.
தொடர்ந்து சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்லும் பேருந்துகள் மீதும், ஓட்டுநர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.