கோவை போத்தனூரில் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது

கோவை போத்தனூரில் பெட்டிக்கடை நடத்தும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் மற்றும் தொழிலாளி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நேற்று (செப்.12) நடந்தது.


கோவை: கோவை போத்தனூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் வியாபாரியிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முரளி (வயது 25) என்பவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (செப்.12) கடை அருகே நின்றிருந்த முரளியிடம் அங்கு வந்த இரண்டு பேர் மது குடிக்க பணம் கேட்டனர். முரளி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தி முனையில் அவரை மிரட்டினர்.

அதிர்ச்சியடைந்த முரளி உரத்த குரலில் சத்தமிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும், அந்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து முரளி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பணம் கேட்டு மிரட்டியவர்கள் போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாம் (வயது 33) மற்றும் போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அகமத் சமீர் (வயது 32) என தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...