கோவையில் தங்க வியாபாரியிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை வாங்கி மோசடி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட தங்கக் கட்டிகளும் மீட்கப்பட்டன.
கோவை: கோவை மாவட்டம் சூலூரில் தங்க வியாபாரி ஒருவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை வாங்கி மோசடி செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி ஹரிசங்கரை சந்திரசேகர் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கக் கட்டிகளை வாங்க விரும்புவதாகக் கூறினார். கடந்த செப்டம்பர் 11 அன்று ஒரு கிலோ தங்கக் கட்டிகளுடன் சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வரும்படி ஹரிசங்கரிடம் கேட்டுக் கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஹரிசங்கரிடம் சந்திரசேகர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது மேனேஜர் ராஜ்குமாரை அனுப்புவதாகவும் கூறினார். ராஜ்குமார் தங்கக் கட்டிகளை வாங்கிய பின், தனது வாகனம் பழுதடைந்ததாகக் கூறி, லட்சுமி மில் பகுதியில் சந்திப்பதாகச் சொன்னார்.
ஆனால், லட்சுமி மில் பகுதிக்கு வந்த ஹரிசங்கர் ராஜ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிசங்கர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (53), நவீன் குமார் (25), பிரபு (25) மற்றும் ஒரு இளைஞர் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
செப்டம்பர் 13 அன்று நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நகை வியாபாரி ஹரிசங்கரை சந்திரசேகர் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கக் கட்டிகளை வாங்க விரும்புவதாகக் கூறினார். கடந்த செப்டம்பர் 11 அன்று ஒரு கிலோ தங்கக் கட்டிகளுடன் சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வரும்படி ஹரிசங்கரிடம் கேட்டுக் கொண்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஹரிசங்கரிடம் சந்திரசேகர், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது மேனேஜர் ராஜ்குமாரை அனுப்புவதாகவும் கூறினார். ராஜ்குமார் தங்கக் கட்டிகளை வாங்கிய பின், தனது வாகனம் பழுதடைந்ததாகக் கூறி, லட்சுமி மில் பகுதியில் சந்திப்பதாகச் சொன்னார்.
ஆனால், லட்சுமி மில் பகுதிக்கு வந்த ஹரிசங்கர் ராஜ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிசங்கர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் சைபர் கிரைம் பிரிவின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (53), நவீன் குமார் (25), பிரபு (25) மற்றும் ஒரு இளைஞர் ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
செப்டம்பர் 13 அன்று நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட ஒரு கிலோ தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.