குரூப் 2 தேர்வு: கோவையில் ஆர்வத்துடன் பங்கேற்ற தேர்வர்கள்; தாமதமாக வந்த பெண் அனுமதி மறுப்பு

கோவையில் 113 மையங்களில் 33,490 பேர் குரூப் 2 தேர்வை எழுதினர். மணிக்கூண்டு பகுதி தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் தாமதமாக வந்த பெண் தேர்வாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.



கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 2,327 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு 2,763 மையங்களில் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 113 தேர்வு மையங்களில் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருவாய்த் துறையினர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



மணிக்கூண்டு பகுதியில் உள்ள தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு அதிகாலை முதலே தேர்வர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.



அவர்கள் பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு தேர்வு எழுத வந்த ஒரு பெண் தேர்வாளரை உள்ளே அனுமதிக்க காவல்துறை அதிகாரி மறுத்துவிட்டார்.



"உங்களை உள்ளே அனுப்பினால் எனது வேலை போய்விடும்" என்று கூறிய அந்த அதிகாரி, கையெடுத்து கும்பிட்டு அந்த பெண்ணை வெளியே அனுப்பினார்.

இந்த சம்பவம் தேர்வு மையத்திற்கு வந்த மற்ற தேர்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நேரம் தவறாமல் வருவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தியது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...