கோவை மாநகராட்சி ஆணையாளர் பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் பீளமேடு பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் விநியோக வால்வு தொட்டி மூடியை சரிசெய்ய உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் இன்று (செப்டம்பர் 14) வடக்கு மண்டலம் வார்டு எண் 26-க்குட்பட்ட பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.



பாலகுரு கார்டன் முதல் எல்லைத்தோட்டம் வரை மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ள இடத்தை ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.



மேலும், பீளமேடு, விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள குடிநீர் விநியோகத்திற்கான வால்வு தொட்டியின் மூடியினை சாலையின் சமநிலைக்கு ஏற்றவாறு அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா தனபால், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர் திருமூர்த்தி, மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...