கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சரவணம்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதி கழகத்தின் 3, 4, 10, 11, 12, 21 ஆகிய வட்டக் கழகங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பொதுமக்களுக்கு கோவை எம்பி கணபதி ராஜ்குமார் நேற்று (செப்டம்பர் 14) நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, பகுதி கழக செயலாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், இந்தியா கூட்டணிக் கட்சி நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.


எம்பி கணபதி ராஜ்குமார் தனது உரையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், பொறுப்பையும் அளித்துள்ளது. தொடர்ந்து உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, பகுதி கழக செயலாளர் சிரவை சிவா (எ) பழனிசாமி, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மாமன்ற உறுப்பினர்கள், பகுதிக் கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், இந்தியா கூட்டணிக் கட்சி நண்பர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டனர்.
எம்பி கணபதி ராஜ்குமார் தனது உரையில், "நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், பொறுப்பையும் அளித்துள்ளது. தொடர்ந்து உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.