கோவை ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத பெண் ரயில் விபத்தில் உயிரிழப்பு

கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே, 30-35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்தார். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Coimbatore: கோவை ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தின் அருகே தண்டவாளத்தில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று (செப்.14) மதியம் 2 மணி அளவில், கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.

இறந்த பெண்ணின் உடலில் பச்சை நிற சுடிதார் மற்றும் மஞ்சள் நிற பேண்ட் அணிந்திருந்தது. அவரது முகம் சிவப்பு நிறத்தில் வட்டமாக இருந்தது. மேலும், இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் இருந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் திருமதி மங்கையர்க்கரசி இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்த பெண்ணின் அடையாளம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்பதால், பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது.

இந்த பெண்ணைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0422-2300043 என்ற எண்ணில் கோயம்புத்தூர் ரயில்வே காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...