வால்பாறை பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பலத்தமழையால் மண் சரிவு- போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் சுமாரான அளவு மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையில் அடிக்கடி மின்வெட்டு, தொலைபேசி சேவைகளும் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் மண்ணும் கல்லும் விழுந்து கிடப்பதினால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



இதனால் அவ்வழியாக பன்னிமேடு, மளுக்கப்பாறை, புதுக்காடு, சோலையார் அணை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், ஆம்புலன்சும் தற்போது செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, அரசு இதுவரை சாலையை சீரமைக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விரைவில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமவெளிப்பகுதியில் கோடை வெய்யில் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் தினம் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், வால்பாறை பகுதி குளிர்சியாக இருபதினாலும், தேயிலைத்தோட்டங்கள் பசுமையாக காட்சியளிப்பதாலும், சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு சில வாரங்களாக அதிகமாக வரத்துவங்கியுள்ளனர்.

கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுணை, சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி, நீரார் அணை, சோலையார் அணை, சக்தி தலனார் காட்சி முணை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாபயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...