கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கழக தலைமை நிலைய செயலாளரும், கழக கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அவருடன் தேமுதிக பிரதிநிதி விஜய்பிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே. அர்ஜுனன், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான செம்மலை வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி ஆகியோருடன், பார்த்திபன், சிங்கை பாலன், பொன்னுச்சாமி போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், சார்பு அணி செயலாளர்களான ஆர். பிரபாகரன், லாலிரோடு ராதா, புரட்சித்தம்பி, ஏ. மணிகண்டன், கே.கே. சக்திவேல், ஹமீது, எஸ்.ஆர். ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.
பகுதி கழக செயலாளர்களான சாரமேடு சந்திரசேகர், சிவக்குமார், சுபம் மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கனகராஜ், நடராஜ், எம்.ஜி.ஜே. ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், இலக்கடை ஜெயபால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதோடு, வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கழக தலைமை நிலைய செயலாளரும், கழக கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அவருடன் தேமுதிக பிரதிநிதி விஜய்பிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே. அர்ஜுனன், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான செம்மலை வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி ஆகியோருடன், பார்த்திபன், சிங்கை பாலன், பொன்னுச்சாமி போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், சார்பு அணி செயலாளர்களான ஆர். பிரபாகரன், லாலிரோடு ராதா, புரட்சித்தம்பி, ஏ. மணிகண்டன், கே.கே. சக்திவேல், ஹமீது, எஸ்.ஆர். ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.
பகுதி கழக செயலாளர்களான சாரமேடு சந்திரசேகர், சிவக்குமார், சுபம் மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கனகராஜ், நடராஜ், எம்.ஜி.ஜே. ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், இலக்கடை ஜெயபால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதோடு, வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர்.