உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா: பரதநாட்டியத்தில் மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாள் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்வில் மாணவிகள் பரதநாட்டியம் ஆடி பக்தர்களை கவர்ந்தனர். சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாட்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை திருமஞ்சனம், ஹோமம், பவித்ரம் சாற்றுதல் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெற்றது.



மூன்றாம் நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமமும் சாற்று முறை கோஷ்டியும் நடைபெற்றது.



பின்னர் முக்கிய நிகழ்வான மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மற்றும் அம்மன் பாடல்களுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



பரதநாட்டிய நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...