உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ விழா: பரதநாட்டியத்தில் மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாள் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்வில் மாணவிகள் பரதநாட்டியம் ஆடி பக்தர்களை கவர்ந்தனர். சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் நான்கு நாட்கள் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை திருமஞ்சனம், ஹோமம், பவித்ரம் சாற்றுதல் சாற்றுமுறை கோஷ்டியும் நடைபெற்றது.



மூன்றாம் நாள் நிகழ்வாக நேற்று சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமமும் சாற்று முறை கோஷ்டியும் நடைபெற்றது.



பின்னர் முக்கிய நிகழ்வான மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் மற்றும் அம்மன் பாடல்களுக்கு மாணவிகள் பரதநாட்டியம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



பரதநாட்டிய நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...