நாளை மிலாடி நபி பண்டிகை: தமிழகம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் மூடப்படும்.


தமிழக அரசு, நாளை (செப்டம்பர் 17) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செப்டம்பர் 4ஆம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தெரியாததால், தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அறிக்கையில், "செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, நாளை அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் ஆகியவை மூடப்படும். பொதுமக்கள் இந்த விடுமுறை அறிவிப்பை கவனத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...