துடியலூரில் திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாட்டம்

கோவை துடியலூரில் திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, பெரியார், அண்ணா, கலைஞர் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை துடியலூரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக திமுக முப்பெரும் விழா மற்றும் 75 ஆம் ஆண்டு பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா துடியலூர் திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



விழாவில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார்.



தலைமை செயற்குழு உறுப்பினர் T P. சுப்ரமணியன், துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், 2வது வட்டக் கழக செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பெரியார், அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 2வது வார்டு கவுன்சிலர் புஷ்பமணி அருள் குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், பகுதி கழக நிர்வாகிகள் சதீஷ்குமார், சன் சோமு, மனோன்மணி, வட்டக் கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, ஆனந்தன், வெற்றிச்செல்வன், அருக்காணி, ctc சுப்ரமணியன், டிரைவர் சுப்பிரமணியன், பழனிச்சாமி, வாசு, T R. ராஜேந்திரன், ரவி, சின்னசாமி, செல்வா ஆகியோரும் பங்கேற்றனர். மகளிர் அணியை சார்ந்த ஷோபனா, கோமதி, தனபாக்கியம், லட்சுமி உள்ளிட்ட கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவினை 2வது வட்ட கழகத் துணைச் செயலாளர் தமிழ்நிதி ஏற்பாடு செய்திருந்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...