கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: அமைச்சர் டிஆர்பி ராஜா அளித்த புதிய தகவல்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா புதிய தகவல் வெளியிட்டுள்ளார். விரைவில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


Coimbatore: கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவையில் YES எனும் சர்வதேச நிறுவனத்தின் கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டிஆர்பி ராஜா, செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து மைதானத்திற்கான இடத்தை தேர்வு செய்தார். தற்போது அதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. விரைவில் மிகப் பிரம்மாண்டமாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்" என உறுதியளித்தார்.



ஏற்கனவே, கோவை ஒண்டிபுதூர், L&T நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் என நான்கு இடங்கள் கண்டறியப்பட்டன. இதில், கோவை ஒண்டிபுதூர் பகுதியில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அந்தப் பகுதி சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு, விளையாட்டுத் துறை சார்பில் ஏற்கனவே டெண்டர் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...