கொடநாட்டில் நடந்த கொலை பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்த கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வரும் மே 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் வருகின்றார். 10-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் சென்னை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். 11-ம் தேதி மாலை கோவை வருகின்றார். பின்னர் 12-ம் தேதி கோவையில் பல்வேறு முக்கிய நபர்களையும், அமைப்புகளையும் சந்தித்து அமித்ஷா பேசவுள்ளார்.

அமித்ஷாவின் கோவை வருகை கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அமித்ஷா வருகையின் போது சென்னையில் பிரத்யேக செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக மீது பாஜக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அதிமுக-வின் நிர்வாகிகள் எந்த புகாரும் தெரிவிக்காத போது எதிர்க்கட்சிகள் மட்டுமே பாஜக மீது புகார் தெரிவித்து விருகின்றனர். பாஜக மீது நாஞ்சில் சம்பத் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் உண்மையில்லாதது.

அதிகார மையத்தின் தலைமையிடமாக இருந்த கொடநாட்டில் நடந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து தமிழக காவல் துறை ஆழமாக விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் கூட சந்தேகம் இருப்பதாக அந்தக் கட்சியினரே தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரத்தை தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்துகள், நிலைப்பாடுகள் மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து விரிவாக்கம் அளிக்க வேண்டியது அவர்தான். அமித்ஷா வரும் போது டாக்டர். கிருஷ்ணசாமி பாஜக-வுடன்  இணைவாரா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

தமிழக அரசியல் சூழல் பாஜக-விற்கு சாதகமாகவே இருந்து வருகின்றது. சமூக நீதி பேசும் தலைவர்கள் மத்திய அரசு கொண்டு வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான புதிய ஆணையம் தொடர்பான சட்டமசோதாவிற்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியை புகுந்த மத்திய அரசு முயற்சிக்கவில்லை" இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...