இந்திய இராணுவ வீரர்களைக் கொன்ற பாகிஸ்தானைக் கண்டித்து அந்நாட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

பாகிஸ்தான் இராணுவத்தால் இராணுவ வீரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பாகிஸ்தான் நாட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இறந்த இராணுவ வீரர்களான நயிப் சுபேதர் பரம் ஜித் சிங் மற்றும் பிரேம் சாகர் ஆகிய இருவரின் உடல்கள் சிதைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த கொடூர செயலிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் பாகிஸ்தான் கொடி எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியினை கீழே வீசி காலில் மிதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அந்தக் கொடியினை எரிக்கவும் அவர்கள் முயன்றனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...