பாகிஸ்தான் இராணுவத்தால் இராணுவ வீரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பாகிஸ்தான் நாட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இறந்த இராணுவ வீரர்களான நயிப் சுபேதர் பரம் ஜித் சிங் மற்றும் பிரேம் சாகர் ஆகிய இருவரின் உடல்கள் சிதைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த கொடூர செயலிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் பாகிஸ்தான் கொடி எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியினை கீழே வீசி காலில் மிதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அந்தக் கொடியினை எரிக்கவும் அவர்கள் முயன்றனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய வீரர்கள் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இறந்த இராணுவ வீரர்களான நயிப் சுபேதர் பரம் ஜித் சிங் மற்றும் பிரேம் சாகர் ஆகிய இருவரின் உடல்கள் சிதைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் இந்த கொடூர செயலிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சியினர் பாகிஸ்தான் கொடி எரிப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியினை கீழே வீசி காலில் மிதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அந்தக் கொடியினை எரிக்கவும் அவர்கள் முயன்றனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொடியை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 9 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.