கோவையில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர். நபிகள் நாயகத்தின் வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர்.
கோவை: கோவையில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ஊர்வலம் நடத்தினர். உலகம் முழுவதும் நபிகள் நாயகம் பிறந்த நாளை மிலாடி நபி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கோவையில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. குறிப்பாக, செல்வபுரம் பகுதியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் நடனமாடினர்.
இஸ்லாமிய சிறுமிகள் மிலாடி நபி கொடி ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், நபிகள் நாயகம் இஸ்லாமியர்களுக்கு வகுத்த வாழ்வியல் நெறிமுறைகளை நினைவுகூர்ந்தனர். உலக மக்கள் பாகுபாடு இன்றி நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், சாதி மத பேதம் இன்றி ஏழை பணக்காரர் பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவுகூர்ந்தனர்.
இமாம்கள் பேசுகையில், "நபிகள் நாயகம் எடுத்துரைத்த வாழ்வியல் நெறிமுறைகளை உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக இந்த ஊர்வலத்தை நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.