மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்புக்கு அருகிலுள்ள குட்டையில் முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. வனத்துறையினர் முதலைகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைகளை பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனையடுத்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் அந்த குட்டையில் உள்ள முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



குட்டையில் இரண்டு இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையில், அந்த தண்ணீரை பம்ப்செட் மோட்டார்கள் வைத்து வெளியேற்றி முதலைகளை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பத்துக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் முதலைகள் தென்பட்டதாக கூறப்படும் குட்டையை சுற்றி கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். முதலைகள் வெளியேறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீரை வெளியேற்றியவுடன் முதலைகளை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...