பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் திமுகவினர் மரியாதை

கோவை காந்திபுரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். ஆனைமலையில் திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Coimbatore: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை இன்று (செப்.17) செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், திமுக பகுதி கழக செயலாளர் பசுபதி, வழக்கறிஞர் கணேஷ்குமார், அன்புசெழியன் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம், கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணத்தில் திமுக கட்சியின் சார்பாக பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு ஆனைமலை நகரச் செயலாளர் டாக்டர் ஏ.பி.செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆனைமலை நிகழ்வில் நகரத் துணைச் செயலாளர் ஏ.அபுதாஹீர் மற்றும் பல உடன்பிறப்புகள் திரளாகக் கலந்து கொண்டனர். இவ்வாறு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...