கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Coimbatore: கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K. அர்ச்சுணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான KR. ஜெயராம் முன்னிலையில் பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் R. பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பல அதிமுக கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பெரியாரின் சிந்தனைகளையும், சமூக சீர்திருத்த பணிகளையும் நினைவு கூரும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது. அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளுக்கு தங்கள் மரியாதையை தெரிவித்தனர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K. அர்ச்சுணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான KR. ஜெயராம் முன்னிலையில் பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் R. பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பல அதிமுக கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
பெரியாரின் சிந்தனைகளையும், சமூக சீர்திருத்த பணிகளையும் நினைவு கூரும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது. அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளுக்கு தங்கள் மரியாதையை தெரிவித்தனர்.