2026-ல் ஆட்சியில் பங்கு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்

கோவை அவினாசி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026-ல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் என்ற வாசகம் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த போஸ்டர்களில் "2026-ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை ரமேஷ் என்ற பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எழுச்சித் தமிழன் முதல் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தது கோவையில் தான். அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டிய பின்பு மதுரைக்கு மாற்றலாகி சென்று டி.பி.ஐ என்ற இயக்கத்தை வழி நடத்தினார். பின்னர் தலித் தலைவர் மலைச்சாமி அவர்களுடன் கைகோர்த்து அவருக்குப் பின் அதனை வழி நடத்தி, பின்பு அரசியல் கட்சியாக மாற்றி தேர்தல் அரசியலை புறக்கணித்து விடுதலை சிறுத்தை இயக்கத்தை தொடங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், "எனது அருமை நண்பர்கள் கோவையில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற புதிய அத்தியாயத்தை முதன் முதலில் கோவையில் தொடங்கி உள்ளார்கள். அவர்களுக்கு கொங்கு சம்பத் மற்றும் அனைத்து விடுதலை சிறுத்தை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்" எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையில் இருந்து கோவை சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணின் மைந்தன், ஒயிட்ஹவுஸ் ந.செல்லத்துரை மத்திய சென்னை நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "எழுச்சித் தமிழர் முதன் முதலில் கோவையில் காலடி வைத்த மண்ணில் இது போன்ற புரட்சி முதலில் தோன்றி இருக்கின்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...