திருப்பூரில் சுற்றுலா வளர்ச்சி ஆய்வுக் கூட்டம்: உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு

திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. சாகச சுற்றுலா செயல்பாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வுக் கூட்டம் உடுமலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.



மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப் பணிகள், தமிழ்நாடு அரசின் சுற்றுலாக் கொள்கை மற்றும் உலக சுற்றுலா தின விழா குறித்து விவாதிக்கப்பட்டது.



கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுலா தொழில் முனைவோர்கள், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.



குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் சாகச சுற்றுலா செயல்பாடுகளை அறிமுகப்படுத்தினால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று வலியுறுத்தினர். இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் கோரிக்கை விடுத்தனர்.



கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், உலக சுற்றுலா தின விழாவை திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மேலும், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளையும், சுற்றுலா கருத்தரங்கமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டத்தில் உடுமலை அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறை உதவி பேராசிரியர் விஜய் ஆனந்த், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், சுற்றுலா சங்கங்களின் நிர்வாகிகள் பிரசாத், பொன்ராஜ், செயது முஹமது, சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் ஜவகர் தொகுத்து வழங்கினார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...