கோவையில் 2017ம் ஆண்டின் அரிமா சங்கத்தின் 8வது கூட்டு மாவட்ட மாநாடு

தமிழகத்தில் பணியாற்றி வருகின்ற அரிமா சங்கம் 324 கூட்டு மாவட்டம், 12 மாவட்டங்களைக் கொண்டு சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழகத்தில் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது. இந்த இயக்கத்தின் மிகப்பெரிய மாநாடாக 2017-ம் ஆண்டின் அரிமா சங்கம் சார்பில் 8-வது கூட்டு மாவட்ட மாநாடு வருகின்ற மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கோவை சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.



இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிமாக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பன்னாட்டு இயக்குநர் தொழிலதிபர் அரிமா ஜி.ராமசாமி அகில உலக அரிமா இயக்கத்தின் 3வது உதவி தலைவராக முன்மொழிவு செய்து தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக உள்ளது.

மேலும், இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பன்னாட்டு இயக்குநர்கள் அரிமா தனபாலன், அரிமா விஜயகுமார் ராஜு மற்றும் கெளரவ விருந்தினர்களாக முன்னாள் பன்னாட்டு இயக்குநர் சங்கர், அரிமா ராமகிருஷ்ணமூர்த்தி, அரிமா நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில், எதிர்வரும் அரிமா ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்புகள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. மேலும் 2018- 2020ம் ஆண்டிற்கான பன்னாட்டு இயக்குநர் தேர்வுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. கூட்டு மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா பாலாஜி ரத்தினம் தலைமை வழிகாட்டுதலின் படி, மாநாட்டுத் தலைவர் அரிமா நௌரத்தன்மல் சாங்கலா மேற்பார்வையில் நடைபெறவுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...