கோவை மாவட்ட கொடிநாள் வசூலில் சிறப்பான முறையில் பணியாற்றி வசூல் இலக்கை எட்டிய 19 மாவட்ட கொடிநாள் நிதி வசூல் அலுவலர்களுக்கு மேதகு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலர்களால் கொடிநாள் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.
அதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் 19 மாவட்ட கொடிநாள் நிதி வசூல் அலுவலர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் விங்.கமாண்டர். கணேசன் வேலுஸ்வாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.